தூத்துக்குடியில் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி; பிரச்சார வாகனம் மூலம் கலை நிகழ்ச்சி.

தூத்துக்குடி மாவட்டம் தெற்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடந்தது. தெற்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து பிரச்சார வாகனம் மூலம் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பின்னர் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணிக்கு ஆறுமுகநேரி ஆதவா டிரஸ்ட் நிறுவனர் பாலகுமரேசன் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேவ சகாயம், லாரன்ஸ், அகஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்காத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்பெல்மேன் வரவேற்றார்.
பேரணியில் மாணவ மாணவியர், ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர், பொதுமக்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் எஸ். எம். சி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் பிராங்கிளின் உள்பட பலர் செய்திருந்தனர்.