தூத்துக்குடியில் மாநகர திமுக சார்பில் ரத்ததான முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் ஆறுமுக நாடார் திருமண மண்டபத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
ரத்ததான முகாமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
இதில் இளைஞர் அணி நிர்வாகி சிவபாலன் உள்ளிட்ட மொத்தம் 102 பேர் ரத்ததானம் அளித்தனர். இந்த நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், மேகநாதன், மாமன்ற உறுப்பினர்கள் சரவணன், ராஜேந்திரன், வட்டச் செயலாளர்கள் மூக்கையா, சுப்பையா, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், இளைஞர் அணி நிர்வாகி சிவபாலன், பகுதி விவசாய அணி அமைப்பாளர், பெரியநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தூத்துக்குடி
TAGS அரசியல்கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தூத்துக்குடிதூத்துக்குடி மாவட்டம்முக்கிய செய்திகள்ரத்ததான முகாம்