BREAKING NEWS

தூத்துக்குடியில் முன் விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து; குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் முன் விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து; குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பழைய காயலில் வாலிபருக்கு கத்திக்குத்து தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் முன் விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

பழைய காயல் காமராஜபுரம் வெல்வெட் காம்பவுண்ட் ஆறுமுகராஜ் மகன் முத்து மணிகண்டன் (வயது 20). டிராக்டர் டிரைவரான இவர் காந்திநகரில் உள்ள தனது பெரியம்மா வீட்டுக்கு சென்று பேசிவிட்டு திரும்பி வந்துள்ளார்.

 

வரும் வழியில் காமராஜபுரம் வீரராகவ பெருமாள் கோயில் அருகே அவர் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த பழைய காயல் அம்ப்ரோஸ் நகர் ஞானராஜ் மகன் ஆபிரகாம் என்பவர் முத்து மணிகண்டனின் இடது புற முதுகில் கத்தியால் குத்தியதோடு, அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

 

இதில் பலத்த காயமடைந்த முத்து மணிகண்டன் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான சேர்க்கப்பட்டுள்ளார்.

 

முத்து மணிகண்டனின் சித்தியான சித்திரை கனி என்பவர் கடந்த 16ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில் ஆபிரகாமின் அண்ணன்களான அகஸ்டின், ஜெலஸ்டின் உள்பட ஏழு பேர் மீது ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக நடந்த இந்த கத்தி குத்து சம்பவம் தொடர்பாகவும் ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
TAGS