BREAKING NEWS

தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்.

தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக, தூத்துக்குடியில் VAO லூர்து பிரான்சிஸ் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் R.பழனி முன்னிலை வகித்தார். இதில் சுமார் 25க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 

இதனைத் தொடர்ந்து உடனடியாக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை அறிவித்த தமிழக முதல்வருக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் நன்றி தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS