தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 20 வது வார்டில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வமுடன் மரம் வளர்க்க வேண்டும் சாலைகளில் குப்பைகளை வீசாமல் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். முன்மாதிரி வார்டாக நமது வார்டை மாற்ற வேண்டும் தூத்துக்குடி 20வது வார்டில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில்
மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாநகராட்சி ஆணையர் சாரு ஆகியோர் உட்பட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
போல்பட்டை அறுபதாவது வார்டில் ஐசக், கணேசன், ரவீந்திரன், அருணகிரி, தங்கம்மாள் ஆகிய ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது அப்பகுதி மாமன்ற உறுப்பினர் தலைமையில் இந்த குழுவினர் செயல்படுவார்கள் எனவும்,
இந்த குழுவினர் அப்பகுதியில் உள்ள பிரச்சனைகளை பொதுமக்களிடமிருந்து கேட்டு பெற்று மாமன்ற உறுப்பினர் மூலம் மேயருக்கு தெரிவிக்கப்படும்.
எனவும் மேயர் அந்த பகுதியின் பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைப்பார் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி 5 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டு பொதுமக்களிடம் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தனர் இந்த கூட்டத்தில் தங்கள் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது என்றும் மின்சார பழுது ஏற்பட்டால் மின்வாரிய அலுவலகத்திற்கு தெரியப்படுத்தினால் இரண்டு நாட்கள் கழித்து வந்து மின் ஊழியர் சரி செய்து தருகிறார் எனவும் மின் ஊழியர்களை மாற்ற வேண்டும் எனவும்,
சாலைகளில் குப்பை தேங்கியுள்ளது அவற்றை சரியாக எடுப்பதற்கு ஆள் வரவில்லை எனவும் மேலும் குப்பைகளை அகற்றவில்லை கண்களில் சேரும் கழிவு குப்பைகளை அகற்ற மாநகராட்சி ஊழியர்கள் வருவதில்லை எனவும் பல்வேறு புகார்களை அந்த கூட்டத்தில் பொதுமக்கள் எடுத்துக் கூறினர்.
உடனடியாக அனைத்தும் சீர் செய்யப்படும் சரி செய்யப்படும் எனவும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.