தூய்மை பணியாளர்கள் தேசவிரோதிகளா:? விஜய் கேள்வி

தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சி தான் என்பது தெள்ளத் தெளிவாகிறது. என தூய்மை பணியாளர்கள் கைதுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.
குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும் போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது.
காயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவியையும் சிகிச்சையையும் உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலத்தை காக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்