தென்காசி அருகே சுமைதீர்ந்தபுரம் ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது!

தென்காசி மாவட்டம், சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே உள்ள சமுதாய நலக் கூடத்தில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சமூக தணிக்கை தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் அருணாசலம், பற்றாளர் தென்காசி ஒன்றிய உதவியாளர் முருகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் மாலதி அனைவரையும் வரவேற்று பேசினார். இலக்கியா தீர்மானங்களை வாசித்தார்.
இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தென்காசி மாவட்ட சமூக தணிக்கை வட்டார அலுவலர் கிறிஸாந்தி ஜூலியட் தலைமையிலான குழுவினர் தணிக்கை பணியில் ஈடுபட்டு சமூக தணிக்கை அவசியம் குறித்து விளக்கி பேசினார்.
சமூக தணிக்கை சிறப்பு கிராமசபா கூட்டத்தில், 2020-2021 மற்றும் 2021-2022 ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடந்த பல்வேறு பணிகள் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த தொகை, பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் எண்ணிக்கை, வேலை நாட்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும், நடைபெற்ற பணிகள் குறித்த அனைத்து விவரங்களும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், மகளிர் குழு உறுப்பினர்கள், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத் தொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.