BREAKING NEWS

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு மற்றும் கண்காட்சி நடந்தது!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உலக  மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு  விழிப்புணா்வு மற்றும் கண்காட்சி நடந்தது!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வாகைமரத்திடல் காந்தி சிலை முன்பு வைத்து உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சார்பில் செங்கோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒருமைச்சாவடி விழிப்புணா்வு கண்காட்சி நடந்தது.

 

நிகழ்ச்சிக்கு செங்கோட்டை நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார். முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவா் கணேசன் நகர்மன்ற உறுப்பினா் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

 

செங்கோட்டை ஒன்றிய களப்பணியாளா் முத்துலெட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து விழிப்புணா்வு கண்காட்சி முகாமை நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

 

 

பின்னா் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு பணியின் திட்ட ஒருங்கிணைப்பாளா் இசக்கிமுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு, அரசின் திட்டங்கள், அடையாள அட்டை பெறுவது எப்படி, சுயதொழில், உபகரணங்கள் பெறுதல் குறித்து விளக்கி கூறினார்.

 

 

நிகழ்ச்சியில் செங்கோட்டை ஒன்றிய களப்பணியாளா் இந்துமதி, மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் அமர்சேவா சங்கத்தின் சிறப்பு பள்ளி ஆசிரியா் ஈஸ்வரி நன்றி கூறினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )