தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையண்ட்நகர் பகுதியைச் சேர்ந்தவர்களான தேவராஜ் மகன் தங்க முருகன் (40) மற்றும் வளன் மகன் வசந்தகுமார் (20) ஆகியோர் கடந்த 14.03.2023 அன்று இரவு வசந்தகுமார் வீட்டருகே மது அருந்தி கொண்டிருந்தபோது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வசந்தகுமார், தங்க முருகனிடம் தவறாக பேசி கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தங்க முருகனின் மனைவி நேற்று (16.03.2023) அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முத்தமிழரசன் வழக்குபதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தார்.
CATEGORIES குற்றம்
TAGS குற்றம்கொலை மிரட்டல்கொலை மிரட்டல் வழக்குபதிவுதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தூத்துக்குடிதூத்துக்குடி மாவட்டம்தென்பாகம் காவல் நிலையம்முக்கிய செய்திகள்