தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் தலைமையில்,
உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று (25.03.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி மீன் பிடி துறைமுகம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில்,
அவர் தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த தொம்மை மகன் அனீஸ் (எ) இருதயராஜ் (35) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரியான அனீஸ் (எ) இதயராஜை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி அனீஸ் (எ) இதயராஜ் மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை உட்பட 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.