தேனியில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தேனி -அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பங்களாமேட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் துவக்கி வைத்தார்.
ஊர்வலம், பங்களாமேட்டில் இருந்து துவங்கி தேனி பழைய பேருந்து நிலையம், நேருசிலை சந்திப்பு வழியாக பெரியகுளம் சாலை கான்வென்ட் வரை சென்று நிறைவடைந்தது.
ஊர்வலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பதாகைகளை ஏந்தியவாறு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மகளிர் சுய உதவிக்குழுவினர், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
CATEGORIES தேனி
TAGS அல்லிநகரம் நகராட்சிகல்விதமிழ்நாடுதலைப்பு செய்திகள்பெண்களுக்கு எதிரான பாலியல் விழிப்புணர்வுமுக்கிய செய்திகள்