BREAKING NEWS

தேனியில் டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம். அமைச்சர் செந்தில் பாலாஜி யின் பெயரைச் சொல்லி கமிஷன் கேட்டு மிரட்டல் விடுவதாக புகார்.

தேனியில் டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம். அமைச்சர் செந்தில் பாலாஜி யின் பெயரைச் சொல்லி கமிஷன் கேட்டு மிரட்டல் விடுவதாக புகார்.

தேனி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரை பயன்படுத்தி, கரூரில் இருந்து சிலர் மிரட்டல் விடுவதாக கூறப்படுகிறது.

அதனை கண்டித்து தேனி கருவேல் நாயக்கன் பட்டியில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

அங்கிருந்த அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர். முன்னதாக இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 

 

இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு நிர்வாகிகள் கூறுகையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரைச் சொல்லி டாஸ்மாக் கடைகளில் விற்பனைத் தொகையில், சதவீத அடிப்படையில் பணம் கேட்டும், பணம் கொடுக்காத கடைகளை அடைக்கச் சொல்லி ஊழியர்களை மிரட்டுவதாகவும், அவ்வாறு அமைச்சர் பெயரைச் சொல்லி மிரட்டும் வடிவேல், சதீஷ் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

இல்லையெனில் அடுத்த கட்டமாக டாஸ்மாக் கடைகளை அடைத்து விட்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS