தேனியில் – தாய் திருநாட்டின் “74 வது குடியரசு தின” விழாவை ஒட்டி, தேனி ஆட்சியர் முரளிதரன் தலைமையில் ஒத்திகை நிகழ்ச்சி.

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று காலை நாட்டின் 74 வது குடியரசு தின விழாவை ஒட்டி தேனி ஆட்சியர் முரளிதரன் தலைமையில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
இந்திய திரு நாட்டில் நாளை 24-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
இவ்விழாவை ஒட்டி தேனி ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், இன்று காலை தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில், தேனி மாவட்ட எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் முன்னிலையில் குடியரசு தின விழா மற்றும் அணிவகுப்பு ஊர்வல ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து காவல்துறை, ஆயுதப் படை, தீயணைப்பு துறை போன்ற வர்களின் அணி வகுப்பு நிகழ்ச்சி களும் நடைபெற்றது.
பின்னர் காவல்துறையில் திறம்பட செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கும் ஒத்திகை நிகழ்வும் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சிந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தி வேல்முருகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.