தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மனம் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் சென்னை, கீழ்ப்பாக்கம், அரசு மனநல மருத்துவநிலையத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறையின் சார்பில்,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் “மனநல நல ஆதரவு மன்றங்கள்” அமைத்து மாணவர்களுக்கு மனநலன் காக்கும் மனம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தேனி அருகே க.விலக்கு பகுதியில் அமைந்துள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திட்ட துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தேனிமாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், உள்ளிட்ட மருத்துவத்துறை வருவாய்த்துறை உள்ளாட்சித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
CATEGORIES தேனி
TAGS Dmkஅரசியல்தமிழ்நாடுதமிழ்நாடு அரசுதலைப்பு செய்திகள்தேனி மாவட்டம்மனநல நல் ஆதரவு மன்றங்கள்முக்கிய செய்திகள்