BREAKING NEWS

தேனி ஆட்சியரக நுழைவாயில் முன்பாக இன்று 5 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தேனி ஆட்சியரக நுழைவாயில் முன்பாக இன்று 5 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்ட ஆட்சியரக நுழைவாயில் முன்பாக இன்று, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்‌

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் பொன் அமைதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட சிறப்பு தலைவர் அழகர்சாமி, மாவட்ட நிர்வாக குழு அமைப்பு செயலாளர் சேதுராமலிங்க பாண்டியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இரண்டு முறை பதிவு செய்யும் பில் முறையை ரத்து செய்து, ஒரே பதிவில் இரண்டு பில் குறுஞ்செய்தி செல்லுமாறு ஆவணம் செய்ய வேண்டும். மேலும் ஒரு பதிவிற்கும் இரண்டாவது பதிவிற்கும் 5 நிமிட கால அவகாசத்தை ரத்து செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அளவு விலை மற்றும் கூடுதல் தொகையுடன் கூடிய ரசீது வழங்கும் வகையில் புதிய 4ஜி விற்பனை முனையம் மற்றும் 4ஜி சிம் கார்டுகள் வழங்கப்பட வேண்டும்.
நியாய விலை கடை ஆய்வு என்பது எப்.பி.எஸ் ஆய்வு செயலி மூலம் ஆய்வு செய்வதை ரத்து செய்துவிட்டு விற்பனை முனையம் மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டும். “ஏற்கிறேன்” என்ற பதிவை நியாய விலை கடை பணியாளர்கள் மட்டும் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். சிறப்பாக “பொங்கல் பரிசு” தொகுப்பு வழங்கிய நியாய விலை கடை பணியாளருக்கு ஊக்கத் தொகையாக குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.10 வழங்கப்பட வேண்டும். பதிவாளர் சுற்றறிக்கையின் படி எடையாளர்களிடமிருந்து விற்பனையாளர் பதவி உயர்வு விற்பனையாளரிடமிருந்து அலுவலக எழுத்தர் பதவி உயர்வு உடனடியாக வழங்கிவிட்டு, நியாய விலை கடை பணியாளர்களின் காலி பணியிடங்களை நிரப்பப்பட வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS