BREAKING NEWS

தேனி ஆட்சியரிடம் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர்.

தேனி ஆட்சியரிடம் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர்.

 

முதுவாக்குடி பழங்குடியின மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டுவதில் முறைகேடு போன்ற புகார்கள் குறித்த மனுவினை வழங்கினர்.

 

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சலேத்து பொன் காட்சி கண்ணன், அன்வர் பாலசிங்கம், தேவாரம் மகேந்திரன், ராதா கணேசன் ஆகியோர் கொண்ட நிர்வாகிகள் வருகை தந்தனர்.

 

அப்போது போடி அருகே முது வாக்குடி மலை கிராமத்தில் வாழும் பழங்குடி இன மக்களுக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சரின் பசுமை வீடுகள் கட்டுவதற்காக உத்தரவு வழங்கப்பட்ட நிலையில்,

 

 

இதுவரை வீடுகள் கட்டி முடிக்கப் படவில்லை. முறைகேடுகளும் நிறைய நடந்திருக்கிறது. அது குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

கம்பம் பள்ளத்தாக்கில் அபரிவிதமாக விளையும் திராட்சை கொள்முதலை அரசே ஏற்று நடத்துவதற்கு பரிந்துரைகள் செய்ய வேண்டும்.

 

பளியங்குடி முதல் கண்ணகி கோவில் வரை பாதை அமைப்பதற்கு அரசு முன்னெடுப்பை செய்திருக்கும் நிலையில் அந்தப் பணிகளை உறுதிப்படுத்தி விரைவு படுத்த வேண்டும்.

 

தேனி மாவட்டத்தில் நீர் வழித் தடங்கள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்ட கோரிக்கை மனுவை தேனி ஆட்சியர் ஷஜீவனா அவர்களிடம் வழங்கினர்.

 

CATEGORIES
TAGS