BREAKING NEWS

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கூலித் தொழிலாளி மர்மமான முறையில் மரணம் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில்  கூலித் தொழிலாளி மர்மமான முறையில் மரணம் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் சார்ந்தவர் கணேசன்(45) இவருக்கும் சென்னையைச் சார்ந்த திவ்யா என்பவருக்கும் திருமணம் முடிந்து ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

பாண்டிச்சேரி பகுதியில் கணேசன் கூலி வேலை செய்து செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கணேசன் அவரது மனைவியுடன் நகை திருப்புவதற்காக சொந்த ஊரான உத்தம பாளையத்திற்கு வந்துள்ளார்.

பின்னர் மனைவி சென்னைக்கு சென்று விட கணேசன் மட்டும் சொந்த ஊரிலே தங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை உத்தமபாளையம் புதிய வட்டாட்சியர் அலுவலகம் அருகே புதூர் செல்லும் வழியில் நடை பயிற்சிக்கு சென்றவர்கள் பார்த்தபோது சுயநினைவின்றி ஒரு நபர் ரத்த காயங்களுடன் இறந்ததாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் விரைந்து வந்து பார்த்த உத்தமபாளையம் காவல்துறையினர் அது கணேசன் என்பதை உறுதி செய்தனர். கணேசனின் உடலில் காயங்கள், மற்றும் ரத்தக்கரைகள் இருந்துள்ளது. இதனை அடுத்து கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்பநாய் கணேசன் இறந்து கிடந்த இடத்திலிருந்து புதிய வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பழைய நீதிமன்றம் வளாகப் பகுதி வரை ஓடிச் சென்று நின்றது. மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் காவல்துறையினர் கணேசனின் இறப்பு குறித்து சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து கணேசன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS