தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டியில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கிராம சபை கூட்டத்தில் வேளாண்மை துறை, , வருவாய்த்துறை, மருத்துவத்துறை, சுகாதாரத்துறை என அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு தங்கள் துறையின் வழியாக பொதுமக்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை பற்றியும், திட்டங்களை எவ்வாறு பொதுமக்கள் பெற்றுக் கொள்வது என்பது பற்றியும் விளக்கங்களை தெளிவாக தெரிவித்தனர்.
மேலும் இந்த கிராம சபை கூட்டத்தில் மருத்துவ துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச மருந்துவ பெட்டகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்த கிராம சபை கூட்டத்தில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள், பள்ளி மாண மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் மிக விரைவில் பரிசீலனை செய்து சரி செய்யப்படும் என உறுதியளித்தார்.