BREAKING NEWS

தேனி மாவட்டம் தேவாரத்தில் மது போதையில் தகராறு செய்ததை கண்டித்த அத்தையை அடித்துக் கொன்ற இளைஞர்.

தேனி மாவட்டம் தேவாரத்தில் மது போதையில் தகராறு செய்ததை கண்டித்த அத்தையை அடித்துக் கொன்ற இளைஞர்.

 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள தேவாரத்தில் மீனாட்சிபுரம் வடக்குத் தெருவில் வசித்து வந்தவர் அழகம்மாள் (65) திருமணம் ஆகாத இவர் அதே தெருவில் உள்ள தனது தம்பி கணேசன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் மது போதையில் வந்த அழகம்மாளின் தம்பி மகன் விக்ரமன் (18) தெருவில் தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

 

 

அதனை பார்த்த அழகம்மாள் அவரை கண்டித்து வீட்டிற்கு அழைத்து சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் மது போதையில் இருந்த இளைஞர் அழகம்மாளை கட்டையால் தலையில் அடித்ததில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலியே பலியானர்.

 

 

தகவல் அறிந்து வந்த தேவாரம் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் மது போதையில் சொந்த அத்தை என்றும் பாராமல் அடித்துக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )