தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வருகை தந்த தேனி பாராளுமன்ற வேட்பாளர் டிடிவி தினகரன் பொதுமக்களை சந்தித்து குக்கர் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வருகை தந்த தேனி பாராளுமன்ற வேட்பாளர் டிடிவி தினகரன் பொதுமக்களை சந்தித்து குக்கர் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டார்.
போடி தேவர் சிலை அருகே வருகை தந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இத்தொகுதி தனக்கு பரீட்சியமான தொகுதி என்றும் இந்த தொகுதி மக்களுக்கும் தனக்கும் 25 ஆண்டு கால பந்தம் உள்ளது என்றும் கால சூழ்நிலையால் நாம் பிரிக்கப்பட்டோம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்றும் மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி என்றும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி என்றும் தன்னை குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் தேனி மாவட்டத்திற்கு தேவையான அனைத்து தேவைகளையும் உடனே நிறைவேற்றி தருவதற்கு என்னால் முடியும் என்றும் குக்கர் சின்னம் என்பது ஏழை எளிய மக்களின் வீட்டில் இருக்கும் ஆதலால் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தேனி வேட்பாளராக போட்டியிடும் தன்னை பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாக கருதி என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார் இதில் பாஜக அதன் தோழமைக் கட்சிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்