தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வள்ளுவர் சிலை அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்ணகி கோவில் நிலப்பரப்பு மற்றும் கேரள எல்லை பரப்புகளில் கேரள அரசு ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்ணகி கோவிலை தமிழகத்திற்கு மீட்டு தரும்படியும் கோரிக்கை விடுத்து நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கேரள அரசு தமிழக இயற்கை வளங்களை சுரண்டுவதை கண்டித்தும் கண்ணகி கோவில் நிலப்பரப்பை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்தும் தமிழக அரசின் கண்டுகொள்ளாத போக்கை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
தமிழகத்தின் இயற்கை வளத்தை மீட்டு தர கோரிக்கை வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி மண்டல செயலாளர் பிரேம்சந்தர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு பேச்சாளர் சிவா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் போடி சட்டமன்ற பொறுப்பாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.