தேயிலை தோட்ட தொழிலாளருக்கு அரசு அறிவித்த 425.40 ரூபாய் வழங்க அரசாணை வெளியிட வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் வால்பாறையில் நடைபெற்றது.

தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலாளருக்கு அரசு அறிவித்த 425.40 ரூபாய் வழங்க அரசாணை வெளியிட வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 425.40க்கு இறுதி அரசாணை வெளியிட தமிழக அரசை வலியுறுத்தி, காந்தி சிலை மற்றும் ஸ்டென்மோர் ஜங்ஷன், பழைய பேருந்து நிலையம் இடங்களில் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர் பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் வால்பாறை மக்கள் இயக்கம் சார்பாக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது .
இதில் அனைத்து தேயிலை தோட்ட தொழிலாளர்களும் ஆர்வத்துடன் கையொப்பம் செய்தார்கள்.

இதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் S. கல்யாணி ஒன்றிய செயலாளர்/ தலைவர் (MLF) மற்றும் CITU பொதுச் செயலாளர் P. பரமசிவம், INTUC பொதுச் செயலாளர் பிரபாகரன், மாணிக்கம் HMS, BMS பொதுச்செயலாளர் சாமிதாஸ், கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அன்பழகன், சபீர்

மனிதநேய கட்சி மற்றும் அலிபாய் மற்றும் வால்பாறை மக்கள் இயக்கம் நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த சம்பளம் ரூபாய் 425 .40 கிடைக்க கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
