BREAKING NEWS

நடுக்கரை ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா..

நடுக்கரை ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா..

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் அருகே நடுக்கரை ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடைபெற்றது.

 

நடுக்கரை ஊராட்சி மேலப்பாதி கிராமத்தில் குறைந்த மின் அழுத்தத்தால் அப்பகுதியை சேர்ந்த க விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் புதிய மின் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் 100 கிலோ வாட் திறன் கொண்ட ரூ.7 லட்சம் செலவில் புதிய மின்மாற்றி அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா எம் முருகன் கலந்து கொண்டு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

 

நிகழ்ச்சிக்கு சீர்காழி மின் வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் அப்துல் வஹாப் மரைக்காயர், உதவி மின் பொறியாளர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தார்.

தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், மாவட்ட துணை செயலாளர் மு.ஞானவேலன், ஒன்றிய செயலாளர் பி.எம்.அன்பழகன், எம். அப்துல்மாலிக், செம்பொன் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் மைனர் பாஸ்கர் மற்றும் திமுக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS