நத்தம் இராம்சன்ஸ் பள்ளி மாணவிகள் ” இளம் விஞ்ஞானிகளாகத் தேர்வு.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு 30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தூத்துக்குடி, வாகைக்குளம் புனித அன்னை தெரேசா பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. 30வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு மாநிலம் முழுவதும் மாவட்ட அளவில் 8000க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டு மாவட்ட மாநாடுகள் நடத்தி அதில் மாநில மாநாட்டிற்கு 545 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன.
இதில் அகில இந்திய தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தமிழ்நாடு மாநில அளவில் 30 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நத்தம் இராம்சன்ஸ் பள்ளி மாணவ, மாணவியர்கள் சமர்ப்பித்த 8 ஆய்வுக் கட்டுரைகளில் 3 ஆய்வுக் கட்டுரைகள் டிசம்பர் 10, 11ஆம் தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில மாநாட்டிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
திருமதி.மாலா, ஆசிரியை அவர்களின் வழிகாட்டுதலின்படி ஏழாம் வகுப்பு பூர்விகா தலைமையில் முகேஷ்வரன் குழு “கழிவு தெர்மோசெட்டிங் நெகிழிப் மாணவி பொருட்களிலிருந்து பைராலிசிஸ் முறையின் மூலம் நெகிழி எரிபொருள் தயாரித்தல் பற்றிய ஆய்வு” என்ற தலைப்பிலும், வழிகாட்டி ஆசிரியர் திருமதி.நதியா, ஒன்பதாம் வகுப்பு மாணவர் கௌசிகன் தலைமையில் பத்தாம் வகுப்பு பார்த்திபன் குழு “தேனீ வளர்ப்பினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகள்” என்ற தலைப்பிலும்,
வழிகாட்டி ஆசிரியர் திருமதி.பத்மேஸ்வரி, பத்தாம் வகுப்பு மாணவர் சூர்யபாலன் தலைமையில் அன்புச்செல்வன் குழு “கரந்தமலை சுற்றுப்புற கிராமங்களில் சுற்றுச்சூழலைப் பாதிக்கக்கூடிய மஞ்சள் குறும்புக்கார எறும்புகள் பற்றிய ஆய்வு” என்ற தலைப்பிலும் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகள் மாநில மாநாட்டிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் ஏழாம் வகுப்பு மாணவி பூர்விகா தலைமையில் முகேஷ்வரன் குழு “கழிவு தெர்மோசெட்டிங் நெகிழிப் பொருட்களிலிருந்து பைராலிசிஸ் முறையின் மூலம் நெகிழி எரிபொருள் தயாரித்தல் பற்றிய ஆய்வு என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை அகில இந்திய தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாட்டிற்குத் தேர்வு செய்யப்பட்டது. தேசிய மாநாடு சனவரி மாதம் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
மாணவர்களுக்கு ஆய்வுகள் குறித்த தேவையான தகவல்களையும், தகுந்த வழிகாட்டுதல்களையும் வழங்கிய திருப்பத்தூர் APSA கல்லூரி பேராசிரியர்கள் திரு.பாலசுந்தரம், திரு.கோபிநாத் அவர்கள் இளம் விஞ்ஞானிகளை வாழ்த்தினார்கள்.
மாணவர்களை தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் மாநிலத் தலைவர் திருமதி.மோகனா, மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் திரு.சுகுமாரன், மாவட்டத் தலைவர் திரு.ராசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி.வளர்மதி, மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு.ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் திருமதி.பரமேஸ்வரி மற்றும் மாவட்டப் பொருளாளர் திரு.கௌதமன் அவர்கள் பாராட்டினார்கள்.
வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரையும் பள்ளி தாளாளர் திரு.இராமசாமி மற்றும் பாஸ்கரன் அவர்கள் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.