நத்தம்- பள்ளி மாணவிகள் மத்தியில் ஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையில் குற்ற விழிப்புணர்வு பிரச்சாரம்.

திண்டுக்கல் மாவட்டம், உலக பெண்கள் குற்றத்தடுப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்திற்கு அரசு மேல்நிலைபள்ளி மாணவிகளை வரவழைக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்களுக்கு காவல் நிலையத்தை சுற்றி காண்பித்த போலீசார் சமுதாயத்தில் பாதுகாப்பாக இருப்பது குறித்தும் அச்சமின்றி சமுதாயத்தை எதிர் கொள்ளவும் ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து அவர்களின் எதிர்கால திட்டம் குறித்து ஆய்வாளர் தங்க முனியசாமி கேள்வி எழுப்பினார் அப்போது அங்கிருந்த மாணவிகள் காவல்துறையில் சேர்ந்து பணியாற்றுவதுதான் குறிக்கோள் என கூறினர்.
இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் அருள், பூபதி, எஸ் எஸ் ஐ சுசிலா, எஸ் எஸ் ஐ கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசர்களும் கலந்து கொண்டனர்.
CATEGORIES திண்டுக்கல்
TAGS உலக பெண்கள் குற்றத்தடுப்பு தினம்கல்விதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திண்டுக்கல் மாவட்டம்நத்தம் காவல் நிலையம்முக்கிய செய்திகள்