நல்லூர் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு..!

மத்திய மாநில அரசு சார்பில் நல்லூர் ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட வரம்பனூர், வண்ணாத்தூர் போன்ற பகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கீழ் செயல்படுத்தப்படும் பசுமை திட்டப் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணிகள், சிமெண்ட் சாலை பணிகள், தொகுப்பு வீடு திட்டப்பணி,
புதிதாக கட்டப்பட்டு வரும் நூலகம், புதிய அங்கன்வாடி கட்டிடப் பணிகள், அரசு பள்ளி சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் போன்றவற்றை பார்வையிட்டார். அப்போது கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி கிரிப்பவனார் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆட்சியரிடம் எடுத்துரைத்தார்.
பின்னர் அரசு பள்ளியில் பயிலும் குழந்தைகளை பார்வையிட்டு அவர்களின் கல்வி தரம் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார், அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவை சுவைத்து உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த திடீர் ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயக்குமாரி, ஷங்கர், உதவி பொறியாளர் சாந்தி, ஓவர் சீஸ் சித்ராதேவி, திருமூர்த்தி, சங்கர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் , கவுன்சிலர் சிவக்குமார் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.