நாகல்குழி கிராமத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கூலி தொழிலாளி உயிரிழப்பு போலீசார் விசாரணை.
அரியலூர் மாவட்டம் நாகல்குழி கிராமம் மேலத் தெருவைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் செல்வராசு தனது வீட்டில் மனைவியின் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
அதே கிராமத்தில் வசிக்கும் செல்வராசு மகள் தந்தையின் வீட்டிற்கு காலை வேலையில் சென்றபோது தனது தந்தை பிணமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கத்தியுள்ளார், அப்பொழுது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தபொழுது செல்வராஜ் உடல் தூக்கில் தொங்கியபடி காலில் ரத்தம் சொட்டியபடி இருந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து உறவினர்கள் இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து செல்வராசு உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிய இரும்புலிக்குறிச்சி போலீசார் வீட்டில் தனியாக வசித்து வந்தவரின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.