நான்கு காவலர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு கருங்கல் அருகே பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்திகோடு பகுதியை சேர்ந்த சூசைமரியாள் வயது : 80, இவரது பேரனை ஒருவழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு 4 ன்கு காவலர்கள் ஆதிகிலையில் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது மூதாட்டியின் பேரனை காவலர்கள் இழுத்து வரும் போது சூசைமரியாள் எனது பேரனை விடுங்கள் எதற்காக இழுத்து செல்கிறீர்கள் என்று கேட்ட போது வயதான மூதாட்டி என்றும் பாராமல் நான்கு காவலர்களும் அவரை பிடித்து கீழே தள்ளி தரையில் போட்டு இழுத்து காலால் உதைத்துள்ளனர்.
இதனால் முட்டு மற்றும் உடலில் இருந்து இரத்தம் வந்து படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அவரது மருமகள் சந்திரகலா 108 ஆம்புலன்ஸை அழைத்து குளச்சல் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர் மூதட்டி சூசைமரியாள் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். ஆகவே மூதாட்டியை கொடுரமான முறையில் தாக்கி கொலை செய்த நான்கு காவலர்களையும் கைது செய்து குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அதுவரை உடலை வாங்கமாட்டோம் உறவினர்கள் தெரிவித்தனர்.