நிலக்கோட்டை கொங்கர் குல கண்மாயில் மீன் பிடிக்கும் பொதுமக்கள்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கொங்கர்குளம் கண்மாய் கடந்த சில தினங்களாக நிரம்பி வழிம்பி வருகிறது. இந்த கன்மாயில் ஏற்கனவே மீன்கள் அதிக அளவு இருந்தது.
இந்த மீனை தற்போது நிலக்கோட்டை, காமாட்சிபுரம், புதுப்பட்டி, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தூண்டில் மூலமாக மீனைப் பிடித்து வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். இதன் காரணமாக தற்போது நிலக்கோட்டை பகுதியில் மீன் பிடிக்கும் நபர்கள் அதிகரித்து வருகின்றன.
இதனை நிலக்கோட்டை முக்கிய நகர்வாசிகள் வேடிக்கை பார்த்து செல்கிறார்கள் ஒருபுறம் சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் உட்பட அனைவரும் மீன் பிடிக்கும் பணியை மிகவும் மும்மரமாக செய்து வருவது வரவேற்கத்தக்க வகையில் உள்ளது.
CATEGORIES திண்டுக்கல்
TAGS குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்நிலக்கோட்டை கொங்கர்குளம் கண்மாய்பொதுமக்கள் தூண்டில் மூலமாக மீனைப் பிடித்தல்முக்கிய செய்திகள்