நிலக்கோட்டை ஜமாபந்தியில் அரசு கள்ளர் பள்ளிகளில் இரவு நேரத்தில் சிறைபிடித்துக் கொள்ளும் போராட்டத்திற்கு அனுமதி வேண்டும் மனு.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் வருவாய்த் தீர்வாயம் ஜமா பந்தி திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த ஜமாபந்தியில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, குடும்பக்கார்டு , உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் பிரமலைக் கள்ளர் கூட்டமைப்பு சார்பாக மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் இதற்கு வந்து ஜமவந்தி அதிகாரி மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணனிடம் தமிழக அரசு கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளி கல்வித்துறையோடு இணைக்கப் போவதாக அறிவிப்பு செய்வதை கண்டித்தும்,
சட்டமன்ற அறிவிப்பை திரும்பப் பெறும் வரை வருகிற ஜூன் மாதம் 15 ஆம் தேதி தேனி திண்டுக்கல் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் தாங்களாகவே முன்வந்து சிறை பிடித்துக் கொள்ளும் போராட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி மனு கொடுத்தனர்.
இதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக முதல்வர், மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இது குறித்து கவனம் செலுத்த மேற்கொள்ளப்படும் என கூறி சமாதானப்படுத்தினார். இப்போது நிலக்கோட்டை தாசிலார் தனுஷ்கோடி மற்றும் பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி கிராம மக்கள் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.