BREAKING NEWS

நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் இறைவனே நினைத்தாலும் எடப்பாடி பழனிசாமி தண்டனை பெறுவதில் இருந்து தப்ப முடியாது, அ.தி.மு.க இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் இணைவது அத்தைக்கு மீசை முளைக்கும் கதைதான் தஞ்சையில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டி:

நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில்  இறைவனே நினைத்தாலும்  எடப்பாடி பழனிசாமி  தண்டனை பெறுவதில் இருந்து தப்ப முடியாது,  அ.தி.மு.க  இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் இணைவது அத்தைக்கு மீசை முளைக்கும் கதைதான் தஞ்சையில்  அ.ம.மு.க பொதுச்செயலாளர்  டி.டி.வி. தினகரன் பேட்டி:

தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சொன்ன கருத்து வரவேற்கதக்க கருத்து

ஆனால் சில மேதாவிகள் சுவாசமே துரோகமாக கொண்டவர்கள் நல்ல விஷயத்திற்கு ஒத்துவர மாட்டார்கள் என்று எடப்பாடியை சாடியவர்,

நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்வு செய்வதில் அணிலை போல் செயல்படுவோம் என்றவர், 2023 கடைசியில் கூட்டணி காங்கிஸ் உடனா அல்லது பா.ஜ.க வோடு கூட்டணியா என்பதை தெரிவிப்பேன் என்றார்

அ.தி.மு.க பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கு குறித்த கேள்விக்கு நீதியரசர் ஜெயச்சந்திரனின் தீர்ப்பு புரட்சி தலைவரின் சட்டதிட்ட விதி அடிப்படையில் தீர்ப்பளித்துள்ளார் சரியான தீர்ப்பு அது தான் உச்சநீதிமன்றத்திலும் தொடரும் என்றும் தனக்கு தெரிந்த சட்ட அனுபவப்படி சொல்வதாக கூறினார்

நெடுஞ்சாலை டெண்டர் வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தண்டனை பெறுவதில் இருந்து இறைவனே நினைத்தாலும் தப்ப முடியாது என்றார்

எடப்பாடி நம்பிக்கை துரோகி மக்கள் தீர்ப்பளிப்பார்கள் என்றும் கூறினார்

பேட்டி டிடிவி தினகரன் பொதுச் செயலாளர் அ.ம.மு.க

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )