நெடுவாசல் கிராமத்தில் புனித சந்தன மாதா ஆலய ஆடி மாத பொங்கல் விழா.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நெடுவாசல் கிராமத்தில் அமைந்துள்ள புனித சந்தன மாதா ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பொங்கல் விழா பில்லாவடந்தை பங்குத்தந்தை அருட்திரு சாலமன் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு புனித சந்தான மாதா ஆலயத்தின் முன்பு மண்பானையில் பொங்கல் இட்டனர். இதனை அடுத்து புனித சந்தன மாதாவிற்கு பில்லாவடந்தை பங்குதந்தை சாலமன் தலைமையில், நெடுவாசல் கிராம மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் நெடுவாசல் கிராம மக்கள் சர்க்கரை பொங்கலை அன்னதானமாக வீடு வீடாக வீடு வீடாக சென்று வழங்கினர்.
CATEGORIES மயிலாடுதுறை
