நெல்லை அருகே கரடி கடித்தது இரண்டு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.
திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வியாபாரத்துக்கு சென்ற நாகேந்திரன் என்பவரை துரத்தி சென்று கரடி கடித்தது கரடியிடமிருந்து காப்பாற்ற சென்ற சைலப்பன் வைகுண்ட மணி ஆகிய இருவரையும் கரடி கடித்து கொதறியது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 நபர்கள் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரடி கடித்த குடும்பத்தினருக்கு வனத்துறை நிர்வாகம் இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் அந்த ஊருக்கு வனத்துறையினர் மேற்கொண்டு கரடி யானை ஆகிய மிருகங்கள் அந்தப் பகுதிக்கு வரவிடாமல் வனத்துறையினர் பாதுகாத்து தர வேண்டும் என்றும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS ஆழ்வார்குறிச்சிகரடி கடித்து இருவர் மருத்துவமனையில் அனுமதிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருநெல்வேலி மாவட்டம்முக்கிய செய்திகள்