நெல்லை புறநகர் மாவட்டம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நெல்லை மாவட்டம் களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா தேசியக்கொடியினை ஏற்றி உரை நிகழ்த்தினார். இதில் நகர செயலாளர் காஜா முகைதீன், துணை தலைவர் கபீர், இணை செயலாளர் ரபிக், மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பீமாஸ் உசேன், செயற்குழு உறுப்பினர் ஆரிப்பை ஜி, எம்.எம் நாசர், நஜிப் உசேன், முகம்மது அலி, ஜமாத் தலைவர் ஷேக், ஜமாத் செயலாளர் பீர்முகம்மது, அல்ஹாஜ் பீர்முகம்மது, ஜின்னா, மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் வி.கே புரம், அம்பை, கல்லிடைகுறிச்சி, வீரவநல்லுர், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல், ஏர்வாடி, மூலைக்கருப்பட்டி, துலுக்கர்ப்பட்டி ஆகிய பகுதிகளில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.