நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் பேரிடர் மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை..

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் பேரிடர் மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தயார் நிலை எப்படி என்பதை பேரிடர் மீட்பு குழுவினர் விளக்கினர். அப்போது மழை வெள்ளத்தில் வரும் விஷ பாம்புகளிடம் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது குறித்து அமைச்சரிடம் விளக்கி கூறினர்.
இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர், காவல் துணை ஆணையாளர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் இருந்தனர்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS அமைச்சர் ராஜகண்ணப்பன்அரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்நெல்லை ஆட்சியர் அலுவலகம் பேரிடர் மீட்பு பணிகள் குறித்து ஒத்திகைபேரிடர் மேலாண்மை துறைமுக்கிய செய்திகள்