BREAKING NEWS

பசுமாத்தூர் ஊராட்சியில் சாக்கடை கழிவுகளை வெறும் கைகளால் அப்புறப்படுத்தும் துப்புரவு ஊழியர்கள்

பசுமாத்தூர் ஊராட்சியில் சாக்கடை கழிவுகளை வெறும் கைகளால் அப்புறப்படுத்தும் துப்புரவு ஊழியர்கள்

வேலூர் மாவட்டம், பசுமாத்தூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் கிராமத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது குப்பைகள் மற்றும் சாக்கடைகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் கழிவுகளை கையுறைகளை கொண்டு செய்யாமல் வெறும் கைகளால் அந்த கழிவுகளை அகற்றும் பணியில் துப்புரவு பெண் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை பார்க்கும் கிராம பொதுமக்களும் கண்டும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர்.

பசுமத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரேமாவதி ஏழ்மை நாதன், துணைத் தலைவர் பிரபாகரன் ஆகியோர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தூய்மை பணியாளர்களை அப்படியே பணியில் ஈடுபடுத்தி உள்ளது கொடுமையிலும் கொடுமையாக உள்ளது.

திமுகவைச் சேர்ந்த இந்த ஊராட்சி மன்றத்தில் இப்படி பணிகள் நடப்பது தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது

இதை கண்டு வெளியூரைச் சேர்ந்த பொதுமக்கள் முகம் சுளித்தவாறு செல்வதை காண முடிந்தது. ஆதலால் இனி வரும் காலங்களில் சுகாதாரப் பணியாளர்கள் இப்படி கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுவதற்கு கையுறைகளையும் அவர்களுக்கு முகக் கவசங்களையும் கொடுத்த பிறகு அவர்களை துப்புரவு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பசுமாத்தூர் கிராம ஊராட்சிக்கு தங்களது அறிவுறுத்தலை வேண்டுகோளாக விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட நிர்வாகமும் இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

செய்தி ஆசிரியர் ச வாசுதேவன் 

CATEGORIES
TAGS