BREAKING NEWS

பயணியர் நிழற்குடை மயிலாடுதுறை ஆட்சியர் திறந்து வைத்தார்.

பயணியர் நிழற்குடை மயிலாடுதுறை ஆட்சியர் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சாத்தங்குடியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 7 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி திறந்து வைத்தார்.

 

உடன் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.. இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம் .முருகன், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல், செம்பனார்கோயில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் எம் அப்துல் மாலிக், அமுர்த.விஜயகுமார்,

 

பேரூராட்சி திமுக செயலாளர் முத்துராஜா, தெரசா கல்லூரி தாளாளர் அருள் சகோதரி கருணா ஜோசப்பெட் தரங்கம்பாடி பேரூராட்சி 6 வது வார்டு உறுப்பினர் செந்தாமரை செல்வி ரமேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS