பல்லாங்குழி சாலையில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி.! புதிய சாலை அமைக்க கோரிக்கை.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கம் கிராமத்திலிருந்து காட்டுமைலூர் கீழக்குறிச்சி மாளிகைமேடு வழியாக கள்ளக்குறிச்சி வரை செல்லும் ஒன்றிய ODR சாலையானது குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மிக மோசமான நிலையில் உள்ளது.
இது குறித்து கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மக்கள் பிரதிநிதிகள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடமும் பலமுறை மனு கொடுத்தும் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பல வருடங்களாக கிடப்பில் போட்டுள்ளனர்.
இச்சாலையில் நாள்தோறும் பள்ளி வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன.
இது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்ள கிராமத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.