பள்ளிகொண்டா ரங்கநாதர் சுவாமி திருத்தேர் பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்.

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பள்ளிகொண்டா பகுதியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ உத்திர ரங்கநாதர் திருக்கோவிலில் இன்று திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் உத்திர ரங்கநாதர் சுவாமி தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
– பெருமளவில் பக்தர்கள் இந்த தேர்த்திருவிழாவில் கலந்துகொண்டு தேறினை கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வடம் பிடித்து இழுத்தனர். அப்பொழுது பக்தர்கள் பற்றி பரவசம் பொங்க நமோ நாராயணா நமோ நாராயணா என முழங்கினர்.
– தேர் திருவிழாவில் வேண்டுதல் வைத்தால் நிறைவேறும் என்று ஐதீகம். கடன் பிரச்சினைகள் உள்ளவர்கள் தேர் இழுத்து ரங்கநாதர் சுவாமிக்கு துளசி மாலை அணிவித்தால் கடன் பிரச்சனை தீரும் என்று ஐதீகம்.
– உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் அதர் சுவாமியை மனதில் நினைத்து தேரை சுத்தி வந்தாள் நிலை சீராகும் என்ற ஒரு ஐதீகம்.
– இந்த தேர்த்திருவிழாவில் பள்ளிகொண்டா மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.