BREAKING NEWS

பள்ளியின் பூட்டை உடைத்து பீரோ புத்தகங்கள் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை கொளுத்திய மர்ம நபர் கைது

பள்ளியின் பூட்டை உடைத்து பீரோ புத்தகங்கள் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை கொளுத்திய மர்ம நபர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த குமனந்தாங்கல் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இதில் 50-க்கும் மேற்பட்ட ஆரம்ப மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

 

இந்நிலையில் இன்று அதிகாலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து பள்ளியில் வைக்கப்பட்டு இருந்த பீரோ புத்தகங்கள் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை கொளுத்தியுள்ளான் மேலும் பள்ளியில் உள்ள மின்சாரம் கணக்கெடுக்கும் இயந்திரம் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தி உள்ளான்.

 

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன்(30) என்பவன் மது போதையில் இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிய வந்தது.

 

இவன் இதே பகுதியில் அடிக்கடி மதுபோதையில் பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது பொதுமக்களுக்கு இடையூறு தருவது
உள்ளிட்ட செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளார் இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் இது போதும் ரசிகர்களை ஈடுபடுவதால் அவரது மனைவி இவரை பிரிந்து தன் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை எடுத்து அவனை கைது செய்த போலீசார் அவனிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS