பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி சிறப்பு பேருந்து்; திமுக எம்எல்ஏ இயக்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அரங்கூர் கிராமத்தில் இருந்து தொட்டியதற்கு காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை எடுத்து முசிறி தொகுதி எம்எல்ஏ திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் உத்தரவின் பேரில் சிறப்பு பேருந்து இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஒப்புதல் அளித்தது .
இதையடுத்து அரங்கூர் கிராமத்தில் இருந்து தொட்டியதற்கு சிறப்பு பேருந்தை கொடியசைத்து எம்எல்ஏ இயக்கி வைத்தார். பின்னர் பேருந்தில் பயணிகளுடன் அமர்ந்து டிக்கெட் எடுத்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தார். இதனால் பயணிகள் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்து கைதட்டினர். பேருந்து துவக்க விழா நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக அலுவலர்கள் மற்றும் அப்பகுதி திமுகவினர் பலர் உடன் இருந்தனர்.