BREAKING NEWS

பழனியில் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

பழனியில் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது,

இதில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் சமுதாயத்தில் பெண்களின் வளர்ச்சி போன்றவற்றை கொண்டாடும் விதமாக மகளிர் தின விழா நடைபெற்றது.

தொடர்ந்து இந்நிகழ்வில் பேசிய பொறுப்பாளர்கள் பெண்களுக்கு சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சமூக வலைதளங்களில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றை எவ்வாறு தவிர்ப்பது போன்ற விழிப்புணர்வுகளை எடுத்துக் கூறினர்.

இதனிடையே பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நிகழ்ச்சி போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மகளிர் காவல் ஆய்வாளர், சமூக நலத்துறை அலுவலர், தமிழ் பேராசிரியர் , மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS