BREAKING NEWS

பவானியில் எம்ஜிஆர் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பவானியில் எம்ஜிஆர் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 ஈரோடு பவானி மேற்கு கண்ணார வீதியில் முன்னால் முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 106-வதுபிறந்தநாள் விழா ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பவானி நகர அதிமுக செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் தங்கவேலு வரவேற்று பேசினார்.

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னால் இயக்குனர் தட்சிணாமூர்த்தி, அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மேகநாதன், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் முனியப்பன், பவானி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், மாவட்ட கவுன்சிலர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இதில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் கே.சி. கருப்பணன், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தலைமை கழக பேச்சாளர்கள் ஆன ரங்கநாதன் சுப்பிரமணியம் உட்பட பலர் சிறப்புரையாற்றினர்.

 

இறுதியில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பிரகாஷ் அர்ஜுனன் நன்றி கூறினார்.

CATEGORIES
TAGS