BREAKING NEWS

பவானி ஹோட்டல் உரிமையாளர்கள் ‌‌கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

பவானி ஹோட்டல் உரிமையாளர்கள் ‌‌கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் ஹோட்டல் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பவானி நகராட்சி பகுதியில் சைவ மற்றும் அசைவ ஹோட்டல்கள் நடத்தி வரும் உரிமையாளர்கள் கடைகளை தூய்மையாக வைத்துக் கொள்வது, உணவு பாதுகாப்பு, பழைய பலசரக்கு, உணவு சுகாதாரம், மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி துணை ஆய்வாளர் ஜெகதீஸ் மற்றும் பவானி நகரப் பகுதியில் உள்ள சைவ அசைவ ஹோட்டல் உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS