BREAKING NEWS

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மணல் குவாரி லாரிகளின் போக்குவரத்து இடையூறால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி…

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மணல் குவாரி லாரிகளின் போக்குவரத்து இடையூறால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி…

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் அருகே மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து மணல் எடுக்கவும் மணல் எடுத்துக் கொண்டும் செல்லும் லாரிகளால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. குவாரியில் இருந்து சாலை நெடுகிலும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்வண்டி போல் நின்று கொண்டிருக்கிறது.


இந்நிலையில் கபிஸ்தலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆரம்ப சுகாதாரம் நிலையத்திற்கு வருபவர்களும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும் மருத்துவமனைக்கு செல்லும் பெரு நோயாளிகளுக்கும் போக்குவரத்து இடைவராகவும் ஹேர் ஹாரன் அதிவேக சத்தத்தை எழுப்பும் மணல் லாரி ஓட்டுனர்கள் ஒருவருக்கு ஒருவர் சாலையில் போட்டி போட்டுக் கொண்டுவாகனங்களை இயக்குவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.


இவற்றால் பொதுமக்கள் இருசக்கர வாகன ஓட்டிகள், மிகவும் சிரமப்பட்டு செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இவ்வலையே வருபவர்கள் சிரமப்பட்டு தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் காவல்துறையினரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்குமாறு பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

CATEGORIES
TAGS