பாபநாசம் அருகே கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் அம்மாப்பேட்டை ஒன்றியம் பெருமாக்கநல்லூர் ஊராட்சியில் நடைபெற்றது.
முகாமிற்கு பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவருமான எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ
தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் மருத்துவர் கண்ணன் அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச்செல்வன், திமுக அம்மாப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் தியாக சுரேஷ், ஊராட்சி மன்றத் தலைவர் ராமனாதன்,
மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது ரிஃபாயி, மருத்துவர்கள் ஏஞ்சலா, ரகுநாத் உள்பட கிராம பொது மக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
முகாமில் கால் நடைகளுக்கு பொது சிகிச்சை, குடற்புழு நீக்கம், சினை ஊசி, சினை பரிசோதனை செய்யப்பட்டு,தாது உப்பு கலவை வழங்கப் பட்டது. மேலும் கால்நடைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
முகாமில் சிறந்த கிடறி கன்றை வளர்ப்பவர்களுக்கு 3 பரிசுகளும், சிறந்த கால்நடை விவசாயிகளுக்கு 3 கேடயங்களும் வழங்கப் பட்டன.