BREAKING NEWS

பாபநாசம் அருகே சொத்து தகராறில் விவசாயி கொலை..

பாபநாசம் அருகே சொத்து தகராறில் விவசாயி கொலை..

 சொத்து தகராறில் விவசாயி கொலை

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, ராராமுத்திரகோட்டை வையாபுரி தோப்பைச் சேர்ந்தவர் சக்திவேல் வயது 45 இவரது குடும்பத்திற்கும், அண்ணன் வீரையன் குடும்பத்திற்கும் சொத்து சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

சம்பவத்தன்று சக்திவேல் வீட்டில் இருந்தபோது வீரையன் மகன் விஸ்வலிங்கம் வயது 30 என்பவர் சக்திவேலுவை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.தடுக்க வந்த அவரது மனைவி ராதிகாவையும் கத்தியால் கீறி விட்டு விஸ்வலிங்கம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

 

படுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடி.துடித்து உயிர் இழந்தார். ராதிகா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீஸ் இன்பெக்டர் கரிகால்சோழன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளி விஸ்வலிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ்.மனோகரன் பாபநாசம்

CATEGORIES
TAGS