பாப்பாக்குடி அருகில் கல்குவாரிகளை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகிலுள்ள அனைந்தநாடார்பட்டியில் விதிகளை மீறி தனியார் கல்குவாரிகள் செயல்படுவதாகவும் அதை உடனடியாக மூடக்கோரி அனைந்தநாடார்பட்டி, கலிதீர்த்தான்பட்டி, பனையன்குறிச்சி, நாலாங்கட்டளை மற்றும் ஆழ்வான்துலுக்கப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆலங்குளம் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் அம்பாசமுத்திரம் தாசில்தார் ஆனந்த பிரகாஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சு வார்த்தைக்கு பின் சமாதானம் ஏற்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர்.
CATEGORIES Uncategorized
