BREAKING NEWS

பிரதமர், முதல்வர் சிவ நாடாருக்கு நன்றி தெரிவித்து சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 108 நாள் தொடர் அங்கப்பிரதசணத்தை ஓம் சந்ரு சுவாமி தொடங்கினார்.

பிரதமர், முதல்வர் சிவ நாடாருக்கு நன்றி தெரிவித்து சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 108 நாள் தொடர் அங்கப்பிரதசணத்தை ஓம் சந்ரு சுவாமி தொடங்கினார்.

திருச்செந்தூர்,

கடலூர் மாவட்டம் ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை சக்தி பீடம் நிறுவனர் ஓம் சந்ரு சுவாமி 18 ஆண்டுகளாக தென்னிந்தியாவில் பல்வேறு கோவில்களில் தொடர்ந்து அங்கப்பிரதசணம் செய்து வந்துள்ளார்.

 

சிதம்பரம் நடராஜ பெருமாள் கோவிலில் நாக்கை அறுத்து காணிக்கையாக செலுத்தியுள்ளார். இந்த நிலையில் காசியில் தமிழ் சங்கம் அமைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு பக்தர்களை அழைத்து செல்ல இருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,..

 

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பெருந்திட்ட வளாக பணிகளுக்கு ரூ.200 கோடி நன்கொடை வழங்கிய சிவ நாடாருக்கும், நன்றி தெரிவித்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று முதல் 108 நாட்கள் தொடர்ந்து அங்க பிரதோஷம் செய்ய முடிவு செய்தார்.

 

 

இன்று தொடங்கிய அங்க பிரதட்சண நிகழ்ச்சியை திருச்செந்தூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் மலர் தூவி தொடங்கி வைத்தார். இதனை எடுத்து ஓம் சந்ரு சுவாமி கோவில் வெளிப்பிரகாரம் முழுவதும் அங்க பிரதட்சணம் செய்தார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )