BREAKING NEWS

பிரதமர் மோடியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றது ஜனநாயக முறை வேலூர் ராஜா திரையரங்கம் அருகே உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பொன்னேரி எம்எல்ஏ பேட்டி.

பிரதமர் மோடியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றது ஜனநாயக முறை வேலூர் ராஜா திரையரங்கம் அருகே உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் பொன்னேரி எம்எல்ஏ பேட்டி.

வேலூர் மாவட்டம் வேலூர் ராஜா திரையரங்கம் அருகே உள்ள வேலூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பொன்னேரி துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

 

அப்போது அவர் கூறியதாவது பிரதமர் மோடி மன்னர் ஆட்சியை போல் செயல்படுகிறார். ஜனநாயகத்தின் குரல் வலையை நெரிக்கிறார் ராகுல்காந்தி நாட்டு மக்களுக்காக பல்வேறு கேள்விகளை பாராளுமன்றத்தில் எழுப்பியதை பொறுக்க முடியாத மோடி ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்துள்ளார்.

 

இதனை காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் பிரதமரின் நண்பரான அதானியும், அம்பானியும் எல்லா சலுகைகளையும் அனுபவிக்கிறார்கள். ஏழை மக்களுக்கு எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் கூட நிதியை குறைத்து விட்டார்கள். இதனால் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

 

நேற்று பிரதமரை தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றது ஜனநாயக முறை. பிரதமருக்கு அரசியல் நாகரீகத்துடன் வரவேற்பளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின் போது மாவட்ட தலைவர் டீக்காராமன் காட்பாடி ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோ காட்பாடி வடக்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் கணேஷ் 1-வது மண்டலத் தலைவர் பாலகுமார் மற்றும் காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர் உடனிருந்தார்.

Share this…

CATEGORIES
TAGS